Friday, November 19, 2010

                                      அயர்லாந்தில்     தீபாவளி   கொண்டாட்டம்                             அயர்லாந்து நாட்டில்    முதன் முறையாக  இந்த வருடம்தீபாவளி       கொண்டாடப்பட்டது.அயர்லாந்து நாட்டின் தலைநகரான  டப்ளினில்  ஒரு       பெரிய ஹாலில் தீபாவளி  பண்டிகை  நவம்பர் 6   ஆம் தேதி   மதியம்  12  மணிக்கு    துவங்கி  மாலை 7 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.முதலில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையுடன்  ஆரம்பமானது.சுமார் இரண்டாயிரம் பேர்வரை கலந்துகொண்டார்கள்.இதில் சுமார் ஐம்பது பேர்வரை   ஐரிஸ் காரர்களும் அடங்குவர்.பரத  நாட்டியம் ,குச்சிப்புடி ,பாங்க்ரா, தாண்டியா ,கேரளா ஓணம்  நாட்டியம் போன்ற  பலவகையான நாட்டியங்களும் பாடல் நிகழ்சிகளும் நடைபெற்றது.விழாவின் இறுதியாக வண்ண வண்ண பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலவிதமான இந்தியன் உணவு அரங்கங்களும் ,மெஹந்தி இடுவது ,சிறிய நகைக்கடை,இந்திய ஆடைகளும்  விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.நம்மவர்களை விட வெளினட்டுக்கரர்கள் அவற்றை ஆவலுடன் பார்த்து ரசித்தனர்.இந்த விழாவில் வடஇந்திய மக்களே அதிகம் பங்கேற்று இருந்தனர்.தமிழ் ,மலையாளி,தெலுங்கர்,கன்னடியர்,வடஇந்தியர்,வெளிநாட்டவர் போன்ற அனைவரும் கலந்துகொண்ட இந்தவிழா இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.                                                                                                                                       

No comments:

Post a Comment